ஜெ நேர்காணலுக்கு வந்த அதிமுகவினரின் பஸ்கள் மோதல்: 4 தொண்டர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா நடத்தும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிமுகவினர் வந்தபஸ்கள் மோதிக் கொண்டதில் 4 தொண்டர்கள் பலியானார்கள்.

இன்று வேலூர் கிழக்கு மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார்.இதற்காக இந்த இரு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள், வேன்களில் தொண்டர்களும்நிர்வாகிகளும் சென்னை கிளம்பினர்.

அணைக்கட்டு தொகுதியிலிருந்து 60 அதிமுக நிர்வாகிகள் அடங்கிய பஸ் ஒன்று இன்று அதிகாலை சென்னைபுறப்பட்டது.

அதே போல ஆம்பூர் அதிமுகவினரும் ஒரு பஸ்சில் சென்னை வந்து கொண்டிருந்தனர். பஸ்கள் அனைத்தும்பள்ளிகொண்டாவுக்கு வந்து அங்கிருந்து மொத்தமாகப் புறப்பட்டுச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு அணைக்கட்டு தொகுதி அதிமுகவினரின் பஸ் பள்ளிகொண்டாசெல்லும் வழியில் வேலூர் கந்தனேரி அருகே சென்றது. அப்போது ஆம்பூர் பஸ் எதிர் திசையில் வந்தது. அதுவும்பள்ளி கொண்டாவுக்கு வேறொரு வழியில் சென்று கொண்டிருந்தது.

இந் நிலையில் இந்த இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வெங்கடேசன் (35), யசோதா (45)ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிச்சாண்டி (39) மற்றும் 50 வயது மதிக்கத்தக்கஇன்னொரு தொண்டர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

9 பெண்கள் உள்ளிட்ட 52 பேர் பலத்த காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட ஆட்சியர் மோகன்தாஸ் மற்றும் டிஐஜி லட்சுமி ஆகியோர் மருத்துவமனைசென்று காயமடைந்தவர்களைச் சந்தித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+