முடிவு வைகோ கையில்; கூறுகிறார் கண்ணப்பன்!
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது குறித்த எங்களதுகருத்துக்களை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவிடம் தெரிவித்து விட்டோம். இனி முடிவு எடுக்கவேண்டியது அவர்தான் என்று மதிமுக பொருளாளரும், மத்திய அமைச்சருமான கண்ணப்பன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் கண்ணப்பன் பேசுகையில், எந்தவித கட்டாயத்திற்கும், நிர்பந்தத்திற்கும் கட்சிஅடி பணிந்து விடக் கூடாது என்பதில் மதிமுக தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும், அப்படியேஇருக்கிறோம்.
கூட்டணியில் இருப்பதா, வேண்டாமா என்பது குறித்து சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அமைச்சர்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை கூறினால் உடனடியாக ராஜினாமா செய்யநாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்கு பங்கம் நேர்ந்து விடாதபடி, தெளிவான, தீர்க்கமான முடிவைகட்சி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது கருத்துக்களை வைகோவிடம் தெரிவித்து விட்டோம்.இனி அவர்தான் டிவு செய்ய வேண்டும்.
நாளை (இன்று) சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார் கண்ணப்பன்.
அதிமுகவுடன் கூட்டணி சேர பா.ஜ.க. தயாராக உள்ளதாக வெங்கையா நாயுடு கூறியது குறித்துக் கேட்டபோது,இது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரம், இது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார் கண்ணப்பன்.