சென்னை மாடி ரயில் திட்டம் தாமதம் ஏன்.? நிதிஷ் குமார் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூர், வேளச்சேரி இடையிலான மாடி ரயில் திட்டம் தொழில் நுட்பக் காரணங்களினால்தாமதமடைந்துள்ளது. விரைவில் இது சரி செய்யப்பட்டு மாடி ரயில் ஓடத் தொடங்கும் என்று மத்திய ரயில்வேஅமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு மற்றும் கடலூர்-வடலூர் இடையிலான அகல ரயில் பாதையை திறந்துவைப்பதற்காக நிதீஷ் குமார் நேற்று இரவு சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் மாடி ரயில் திட்டத் தாமதம் குறித்துக் கேட்கையில், ஜனவரிமாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுவதாக இருந்தது. ஆனால் சில தொழில் நுட்பக் காரணங்களினால் திட்டம்தாமதமடைந்துள்ளது.
இதை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இது நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் மாடிரயில் ஓடத் தொடங்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications