ரஷ்ய நிறுவனத்திடம் லஞ்சம்: தமிழக அதிகாரிகளை சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்கு
சென்னை:
சென்னை அருகே மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு டெண்டர் தர ரஷிய நிறுவனத்திடம் தமிழகஅரசு அதிகாரிகள் ரூ. 50 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு டெண்டர்கள் கோரியது. இதற்கு விண்ணப்பித்தரஷிய நிறுவனத்தின் டெண்டர் குறித்து பரிசீலிக்காமல் புதிய டெண்டர் விட அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து ரஷிய நிறுவனம் சென்னை உயர்நீதமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மேலும், தமிழக அதிகாரிகள்சிலர் மாஸ்கோவுக்கே போன் செய்து ரூ. 50 கோடி லஞ்சம் கேட்டதாகவும் ரஷிய நிறுவனம் உயர் நீதிமன்றத்தில்தெரிவித்திருந்தது.
இந் நிலையில், ரஷிய நறுவனத்திடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடர்பான விசாரணையை சிபிஐயிடம்ஒப்படைக்கக் கோரி வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்நாளை விசாரிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications