For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருக்கலைப்பில் பெண் சாவு: போலி பெண் டாக்டர் கைது!

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலத்தில், பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததில் அந்தப் பெண் மரணமடைந்தார். அவருக்கு கருக்கலைப்பு செய்தபோலி பெண் டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் அரகளூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி.இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஜெயப்பிரியா, அலமேலு ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந் நிலையில் கலைச்செல்வி மீண்டும் கர்ப்பமடைந்தார். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகையில் மேலும் ஒரு குழந்தையா என்று கவலையடைந்த கலைச்செல்வி, சின்னச்சாமிதம்பதியினர் 3-வது குழந்தையை கலைத்து விட முடிவு செய்தனர்.

இதையடுத்து ராணி என்பவரை அணுகி கருக்கலைப்பு செய்ய கோரினர். அவரும் கருவைக் கலைக்கமுயற்சித்துள்ளார். அப்போது கலைச்செல்வியின் உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து கலைச்செல்வியை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மரணமடைந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் ராணி ஒரு போலி டாக்டர் என்பதைக் கண்டறிந்து அவரைக் கைதுசெய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X