ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்: சோகத்தில் தாய்!
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்போது 3 பெண்குழந்தைகள் பிறந்தன.
நாகர்கோவில் அருகே உள்ள இறைச்சக்குளம் என்ற பகுதியில் உள்ள விஷ்ணுபுரம் காலனியில் வசித்து வருபவர்பால்ராஜ். இவரது மனைவி சொர்ணமணி.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த சொர்ணமணிக்கு 24ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துகோட்டாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார் சொர்ணமணி.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனேயே டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து 3 குழந்தைகளையும்வெளியே எடுத்தனர். 3 குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் பிறந்த நாளன்று 3 பெண் குழந்தைகளும் பிறந்ததால், அப் பகுதி பா.ஜ.க. தொண்டர்கள்சொர்ணமணிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினர். ஆனால் அவர்களது வாழ்த்துக்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் சொர்ணமணி இருந்தார்.
ஏற்கனவே 2 பெண் குழந்தைகளுடன், வறுமையில் வாடி வரும் நான், தற்போது 5 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை என்று கண்ணீருடன் கூறினார். சொர்ணமணியின் கணவர்பால்ராஜ், சாதாரண கூலித் தொழிலாளி ஆவார்.