முன் கூட்டியே தேர்தல்: அத்வானி-தாக்கரே ஆலோசனை
மும்பை:
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானி சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேயுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததையடுத்துமக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தேசித்துள்ளது. இது குறித்து கூட்டணிக் கட்சிகளின் கருத்தைஅறிய முடிவெடுத்துள்ளது.
அதன் முதல் கட்டமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சியான சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரேவைச் சந்தித்து அத்வானி இன்று ஆலோசனை நடத்தினார்.
தாக்கரேவின் கருத்தை வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறும் பா.ஜ.க. தேசியசெயற்குழுக் கூட்டத்தில் அத்வானி தெரிவிப்பார் என்று தெரிகிறது. தாக்கரேவுடனான சந்திப்பிற்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் கருத்தை அறிந்த பின்பே இது குறித்துஇறுதி முடிவு எடுக்கப்படும்.
முன் கூட்டியே தேர்தல் நடத்துவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமையும். கூட்டணியிலிருந்துதிமுக விலகியது துரதிஷ்டவசமானது என்றார்.
மூன்றாவது அணி: கெளடா
இந் நிலையில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளத் தலைவருமான தேவேகெளடா இன்று செய்தியாளர்களிடம்பேசுகையில்,
வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. மத்தியில் தொங்குநாடாளுமன்றமே உருவாகும். தேர்தலுக்குப் பின் மூன்றாவது கூட்டணி அமையும். அதில் மாநிலக் கட்சிகள் முக்கியபங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications