சொத்து குவிப்பு: துரைமுருகன், கு.ப.கிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை & வேலூர்:

முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகக் கூறி, கடந்த ஆண்டு சென்னை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் வேலூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜகோபால் முன் நேற்று 450 பக்ககுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், துரைமுருகன் தனது வருமானத்தையும் மீறி ரூ. 3.94 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும், அவரதுமகன் கதிர் ஆனந்த், மனைவி சாந்திகுமாரி, மருமகள் சங்கீதா ஆகியோர் அவரைச் சொத்து சேர்க்கத்தூண்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 216 ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன.

கு.ப.கி:

இதேபோல் கு.ப. கிருஷ்ணனும் தனது வருமானத்தை மீறி ரூ. 3.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சென்னைமுதன்மை குற்றவியல் சிறப்பு நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 316 பக்க குற்றப்பத்திரிக்கைத்தாக்கல் செய்துள்ளனர். இதனுடன் 4,500 பக்க ஆதாரங்களையும் இணைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+