284 தனியார் மதுக்கடைகள் நடத்த நீதிமன்றம் அனுமதி: எதிர்த்து அப்பீல் செய்கிறது அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

284 தனியார் மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு தமிழக அரசு செய்ய முடிவு செய்துள்ளது. அந்தக் கடைகளுக்கு உரிமம்வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட கலால் பிரிவு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மார்க் நிறுவனமும், கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து மதுபான விற்பனை செய்வதற்கான அவசரச்சட்டத்தை தமிழக அரசு கடந்த அக்டோபர் 26ம் தேதி பிறப்பித்தது. அதை எதிர்த்து தனியார் மதுபானவியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கில் நேற்று தீர்ப்புவழங்கப்பட்டது.

தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாவது:

டாஸ்மார்க்கோ கூட்டுறவு சங்கங்களோ மாநில அரசின் முகவர்களாகச் செயல்படுவதைத் தடை செய்ய சட்டத்தில்இடமில்லை. கூட்டுறவுச் சங்கங்கள் மது விற்பனை செய்வது புதிதல்ல. எனவே அரசு பிறப்பித்த அவசரச் சட்டம்செல்லுபடியாகும்.

அதே நேரத்தில் கடந்த வருடம் ஜூலை 7ம் தேதிக்கு முன், ஒயின் ஷாப் நடத்த உரிமக் கட்டணம் செலுத்தியுள்ள284 பேரும் அனுமதிக்கப்பட்ட காலம் வரை உரிமத்தைப் புதுப்பித்து கடைகளை நடத்லாம். அவர்களுக்கு இந்தஅவசரச் சட்டம் பொருந்தாது.

ஜூலை 7ம் தேதிக்குப் பின் உரிமக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரசு 15 சதவீத வட்டியுடன் செலுத்தியதொகையைத் திருப்பித் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதுவரை,284 கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட கலால் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+