கலாம் அண்ணனுடன் இலங்கை எம்.பி சந்திப்பு
ராமேஸ்வரம்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகம்மது மீரான் வீட்டுக்கு இலங்கை முன்னாள்அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான பெளசி சென்று அவருடன் பேசினார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான பெளசி, ராமேஸ்வரம் வந்தார். அங்குள்ள முத்து முகம்மது மீரானின்வீட்டுக்குச் சென்று அவருடன் சிறிது நேரம் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பெளசி கூறுகையில், மரியாதை நிமித்தமாகவே முத்து முகம்மது மீரானை சந்தித்துப்பேசினேன். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முஸ்லீம்களையும்சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
முடங்கிப் போயுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும், அதில் முஸ்லீம் சமுதாய பிரதிநிதிகளும்சேர்க்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார்பெளசி.












Click it and Unblock the Notifications