மலேசியாவில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதில்லை: டத்தோ சாமிவேலு
சென்னை:
மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுமைப்படுத்தப்படவில்லை என அந் நாட்டு நாட்டு அமைச்சர்டத்தோ சாமிவேலு கூறினார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலிருந்து குறிப்பாகசென்னையிலிருந்து தமிழக இளைஞர்களை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பும் சில ஏஜென்டுகள் தவறாகநடந்து கொள்வதால் அங்கு வரும் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் இதுகுறித்து அவருடன் பேசி, சென்னையிலிருந்துசெயல்படும் போலி ஆளெடுப்பு நிறுவனங்கள், ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வேன்.
அதேபோல மலேசியாவில் உள்ள போலி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன்.
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு முறையான ஆவணங்களுடன் வருபவர்களை மலேசிய போலீஸார்துன்புறுத்துவதில்லை, தொந்தரவு செய்வதில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 தமிழ் இளைஞர்கள் மீதான விசாரணை முடிவடைந்து, அவர்கள்நிரபராதிகள் என்று நரூபிக்கப்பட்ட உடன் அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்வேன் என்றார்.