ஆம்னி பஸ்கள் சென்னை நகருக்குள் வர நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி துறை செயலாளர் ஒருஉத்தரவைப் பிறப்பித்தார். அதில், சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள்சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச், அரசு உத்தரவை சட்டவிரோதம் என்று அறிவித்து, ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து செல்லதடையில்லை என்று அறிவித்தது.

அரசுப் பேருந்துகள் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஆம்னி பேருந்துகள்மட்டும் தாம்பரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விடுகின்றன. இது சட்ட விரோதமானது என்று நீதிபதிகள்தெரிவித்தனர்.

இருப்பினும், ஆம்னி பேருந்துகளை நகர சாலைகளின் ஓரமாகவோ அல்லது வேறு எங்குமோ நிரந்தரமாக நிறுத்திவைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+