வைகோ ஜாமீனில் வர வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீனில் வெளியே வந்து தனது வழக்கை எதிர்த்துப் போராட வேண்டும்என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பா.ஜ.க கூட்டணியிலிருந்து திமுகவும், மதிமுகவும்விலகியிருப்பது தாமதமான ஒன்றுதான் என்றாலும் கூட இப்போதைய சூழ்நிலையில் வரவேற்கப்படக் கூடியமுடிவுதான்.
வைகோ ஜாமீனில் வெளியே வர ஒப்புக் கொள்ள வேண்டும். ஜாமீனில் வந்த பின்னர் தன் மீது தொடரப்பட்டுள்ளபொய் வழக்கை எதிர்த்து அவர் போராட வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications