கருணாநிதி- வாசன் சந்திப்பு: கூட்டணி குறித்து ஆலோசனை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தொடங்கும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுகதலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.
நானும் இன்று கருணாநிதியை மரியாதை நிமித்தமாக பேசினேன். அரசியல் விஷயங்களும் பேசினோம். டெல்லிசென்று கட்சித் தலைமையுடன் பேசிய பிறகு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2 அல்லது 3 நாட்களில்தொடங்கும்.
தமிழகத்தில் அமையவுள்ள மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றார்.
அதிமுகவிடம் இருந்து ஒதுங்கும் தேசிய லீக்
பா.ஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்று இந்திய தேசிய லீக் கட்சித்தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் எந்தக்கட்சியுடனும் நாங்கள் கூட்டு சேர மாட்டோம். பா.ஜ.கவுடன் இத்தனை நாட்களாக கூட்டணி வைத்திருந்ததிமுகவும், மதிமுகவும் வெளியேறியிருப்பது வரவேற்புக்குரியது என்றார்