பட்டியல் அனுப்புவதில் தாமதம்: அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேருவதில் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

3 நீதிபதிகள் குழுவின் தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் இன்று பணியில் சேர வந்தபோது, அவர்களது பெயர்ப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று கூறிபணியில் சேர விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் ஆகிய 2,771 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பானவிசாரணை அறிக்கையை 3 நீதிபதிகள் குழு அரசிடம் சமர்ப்பித்ததையடுத்து, அதுதொடர்பான முடிவை அரசுநேற்று வெளியிட்டது.

அதன்படி 2,771 பேல் 412 பேர் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 77 பேர் மீது எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. மற்றவர்கள் மீது பதவி இறக்கம், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இவர்களில் 412 பேர் தவிர மற்றவர்கள் இன்றே பணியில் சேருமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், 2,359 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தங்களது அலுவலகங்களுக்குச்சென்றனர். ஆனால், இன்று பிற்பகல் வரை பணியில் சேர உத்தரவிடப்பட்ட ஊழியர்களின் பெயர்கள் அடங்கியபட்டியல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்னையில் இருந்து வந்து சேரவில்லை.

இதனால் அவர்கள் மீண்டும் பணியில் சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பணி இறக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு என்ன பதவி கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால்பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட சில ஊர்களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தங்களது அலுவலகங்களில் காத்துக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+