வீட்டு வசதி வாரிய வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி
சென்னை:
சென்னையில் வீட்டு வசதி வாரிய வீட்டின் ஜன்னல் இடிந்து கீழே விழுந்ததில் 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை, சாந்தோம் பகுதியில் உள்ளது குயில் குப்பம். இங்கு வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி வீடுகள் உள்ளன.கொஞ்சமும் பராமரிப்பே இல்லாமல் பாழடைந்த நிலையில் இவை உள்ளன.
கட்டடத்தை சீர் செய்யக் கோரி பலமுறை இக்குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் வீட்டு வசதி வாரியத்தைக்கேட்டுக் கொண்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்றிரவு இக் குடியிருப்பின் 3-வது மாடியிலில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் பெயர்ந்து கீழேவிழுந்தது. தொடர்ந்து ஜன்னல் இருந்த சுவரும் கீழே விழுந்தது. இதில் கீழே விளையாடிக் கொண்டிருந்த 2சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஒரு சிறுவன்இறந்தான். இன்னொரு சிறுவன் மருத்துவமனையில் இறந்தான்.
இதைத் தொடர்ந்து குயில் குப்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவுவரை அவர்களது போராட்டம் நீடித்தது. போலீஸாரும், அதிகாரிகளும் விரைந்து வந்துஅவர்களைசமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.