For Daily Alerts
Just In
இன்று வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
திருச்சி:
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) அதிகாலைசொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று வைகுண்ட ஏகாதசியாகும். இதையொட்டி வைணவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து நாளை அதிகாலைசொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பது வழக்கம்.
தமிழகத்தில் உள்ள பிரபலமான வைணவக் கோவில்கள் அனைத்திலும் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறப்புநிகழ்ச்சி நடைபெறுகிறது. மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலிலும்நாளை அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்து வருகிறார்கள். சொர்க்க வாசல் திறப்புநிகழ்ச்சியையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, January 2, 2004, 5:30 [IST]