தாமரைக்கனியை அடித்த இன்ஸ்பெக்டரை கைது செய்ய வாரண்ட்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசனைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாமரைக்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறியிருப்பதாவது: சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, நானும் எனதுகுடும்பத்தினரும் முன்னெச்சக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டோம்.

இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் எங்களைக் கைது செய்தனர். அப்போது போலீஸ் காவலில்வைத்து என்னையும், எனது குடும்பத்தினரையும் முருகேசன் கடுமையாக தாக்கினார். இதில் எனது கால் மற்றும்கையில் படுகாயம் ஏற்பட்டு, எலும்பு முறிந்தது.

எனவே இதுதொடர்பாக முருகேசனை விசாத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்தாமரைக்கனி.

இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு கூறி இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு நீதிபதி சந்திரபாபு நோட்டீஸ்அனுப்பியிருந்தார். ஆனால் 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தை அவர் மதிக்கவில்லை. நோட்டீசுக்குபதிலும் தரவில்லை. நீதிமன்றத்துக்கும் வரவில்லை.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசனைக் கைது செய்யுமாறு நீதிபதி வாரண்ட் பிறப்பித்தார். மேலும் இந்தவழக்கை விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+