6ம் தேதிக்குப் பின் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார் வைகோ
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது மனைவி ரேணுகாதேவி சந்தித்தார்.
வைகோவின் மகன் துரை வைய்யாபுரி வாரத்தில் பலமுறை அடிக்கடி அவரை சிறையில் சென்று சந்தித்து வருகிறார்.ஆனால், ரேணுகா தேவியை சிறைக்கு வர வேண்டாம் என வைகோ கூறிவிட்டதால் அவர் வராமல் இருந்துவந்தார்.
இந் நிலையில் நேற்று சென்னையிலிருந்து வேலூர் சென்ற ரேணுகாதேவி, கணவர் வைகோவை சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் வைகோ.
கண்ணப்பன், செஞ்சி சந்திப்பு:
இந் நிலையில், சமீபதத்தில் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த கண்ணப்பன் மற்றும் செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் இன்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.
பதவி விலகிய பின் வைகோவை இவர்கள் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
பின்னர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,8 மதிமுக நிர்வாகிகளின் ஜாமீன் மனுக்கள் மீதும் சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு வைகோ ஜாமீன் மனு தாக்கல் செய்வார். மத்திய அமைச்சர் பதவிகளைராஜினாமா செய்ததற்கு எங்களுக்கு பாராட்டு தெரிவித்தார் வைகோ என்றார்.
நிர்வாகிகள் ஜாமீன்: 6ம் தேதி விசாரணை
இதற்கிடையே, பொடா சட்டத்தில் வைகோவுடன் கைது செய்யப்பட்டு கடந்த 1 வருடமாக சிறையில்வைக்கப்பட்டுள்ள 8 நிர்ர்வாகிகளும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் 18ம் தேதி வரை நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் இந்த மனுக்கள் ஜாமீன் மனுக்கள் மீதானவிசாரணை வரும் 19ம் தேதி தான் விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவில், ஒரு ஆண்டை சிறையில் கழித்தவர்களுக்கு சாதாரண ஜாமீன் விதிமுறைகளே பொருந்தும் என்றுநீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில், இவர்களின் ஜாமீன் மனுக்களையும் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்ற பதிவாளரிடம் மதிமுக வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வரும் 6ம் தேதியே ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடத்தவுள்ளது. நீதிபதிபி.டி.தினகரன், நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுக்களை விசாரிக்கிறது.
இதில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் வைகோவும் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்.