மதுரை உயர் நீதிமன்ற கிளை: 3 நீதிபதிகள் குழு ஆய்வு
மதுரை:
மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளையின் கட்டுமானப் பணிகளை சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 3 நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது.
மதுரை உலகனேரியில் ரூ. 50 கோடி மதிப்பில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை கட்டப்பட்டு வருகிறது. முக்கால்வாசிப் பணிகள் முடிந்த நிலையில் ஒரு சில பணிகள் இன்னும் பாக்கி உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவ்வப்போது சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் குழு மதுரை வந்து கிளை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது. இந் நிலையில் 3 நீதிபதிகள் குழு மதுரை வந்து பணிகளை ஆய்வு செய்தது.
நீதிபதிகள் கோவிந்தராஜன், முருகேசன் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய குழு கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்தது. நீதிமன்ற ஊழியர்களின் குடியிருப்பையும் அவர்கள் பார்த்தனர்.
பின்னர் நீதிபதி கோவிந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்டுமானப் பணியில் இன்னும் நிறைய பாக்கி உள்ளது. அரசு கொடுக்க வேண்டிய ரூ. 5 கோடி நிதி இன்னும் வழங்கப்படவில்லை. அது வந்தால் பெரும்பாலான பணிகளை முடித்துவிடலாம் என்றார்.
தங்களது ஆய்வறிக்கையை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் இக் குழுவினர் விரைவில் கொடுக்கவுள்ளனர்.