தமிழகத்தில் நாளை 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து
சென்னை:
தமிழகம் முழுவதும் நாளை 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
இதற்காக 40, 400 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இப் பணியில் 1.7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கிடைக்கும் வகையில் ரயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதிலும் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்படாத 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையிலிருந்து இந்தியாவின் பெயரை நீக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகத்தான் நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 22ம் தேதி சொட்டு மருந்து கொடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையே நான்கு வருட இடைவெளிக்குப் பின் தமிழகத்தில் முதல்முறையாக முதல் போலியோ நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.