அரசு ஊழியர்களுக்கு இரக்கம் காட்ட ஜெ.வுக்கு வீரமணி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மன்னித்து, இரக்கம் காட்டி மீண்டும் பணியில்சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், 999 அரசு ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதுநியாயமற்றது. கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட இரக்கம் காட்ட சட்டத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்இந்த அரசு ஊழியர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கூட வழங்கப்படாதது வருத்தம் தருகிறது.

இவர்கள் எந்தக் குற்றம் செய்யவில்லை. தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதையும் மீறிஅவர்களை டிஸ்மிஸ் செய்துள்ளது முறையான செயலன்று.

கடந்த 6 மாதங்களில் மிகக் கடுமையான அளவுக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுவிட்டனர். நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அரசுக்கு ஆதரவாகவே இருந்தாலும் கூட இரக்கம் காட்டி அவர்களைமீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார் வீரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+