For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ ஆளெடுப்பில் கூட்ட நெரிசல்: போலீஸ் தடியடியில் 20 பேர் காயம்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

கடலூரில் ராணுவத்திற்கு நடந்த ஆளெடுப்பின்போது ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில் 20 பேர் காயமடைந்தனர்.

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று ராணுவத்தின் சலவையாளர் மற்றும் துப்புறவாளர் பணிக்குஆளெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 10மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு திரண்டனர்.

10,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு அரங்கில் கூடியதால் அங்கு கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும்ஏற்பட்டது. இந் நிலையில் 1,000 பேருக்கு மட்டும் நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கூடியிருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்தனர். கூடுதலாக ஆட்களைத் தேர்வு செய்யக் கோரிஅவர்கள் முண்டியடித்தனர்.

இதையடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் இளைஞர்கள் நாலாபுறமும்சிதறி ஓடினர். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த களேபரத்தில் விளையாட்டு அரங்கத்தின் ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X