மேட்டூர் அணை இன்று மூடல்; கவலையில் விவசாயிகள்!
சேலம்:
தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால் மேட்டூர் அணை இன்று மூடப்பட்டது.
காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளின் பலத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் முதல்வாரம் மேட்டூர் அணையைத் திறக்க உத்தரவிட்டது. மிகக் குறைந்த அளவே நீர் இருப்பு இருந்ததால் தொடக்கத்தில்விநாடிக்கு 5000 கன அடி நீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விடப்பட்டது.
ஆனால் அந்த தண்ணீர் போதாது என்று நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததால்விநாடிக்கு 12,000 கனஅடியாக நீர் திறப்பு மாற்றப்பட்டது. இதையடுத்து வெகுவேகமாக நீர் இருப்பு குறையத்தொடங்கியது.
இந் நிலையில் இன்று காலை 11.30 மணியுடன் அணை மூடப்பட்டது. அணையின் நீர் இருப்பு 30 அடி அளவுக்குகுறைந்துவிட்டால் அணை மூடப்படுவதாகவும், அணையில் 7.99 டி.எம்.சி தண்ணீரே உள்ளது எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடை மடை பகுதிகளான நாகை, திருவாரூர் பகுதி நிலங்களுக்குஇன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை என்று அப் பகுதி விவசாயிகள் சோகத்துடன் கூறுகின்றனர்.
பிப்ரவரி மாத இறுதிக்குள் தண்ணீர் கிடைத்தால்தான் கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிரை ஓரளவாவதுகாப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் அணையில் தண்ணீர் இல்லாததால் அதுசாத்தியமில்லை, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால்தான் உண்டு என்கிறார்கள் அதிகாரிகள்.
மழையும் பொய்த்துப் போய், கர்நாடக அரசும் தண்ணீர் திறந்து விடாமல், இருந்த மேட்டூர் அணைத் தண்ணீரையும்திறந்து விட்டு விட்ட நிலையில் சம்பா பயிர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications