74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

போலியோ ஒழிப்புக்காக இந்தியா முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 40,000 முகாம்களில் 74 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், குடும்ப நல மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள்,பால்வாடிகள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள்அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 1.7 லட்சம் பேர் சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கல்லூரி, பள்ளி மாணவ,மாணவியரும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில் 965 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. எழும்பூர்குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் முகாமைத் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 3.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகொடுக்கப்பட்டது. சொட்டு மருந்து கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு இன்று வீட்டுக்கு வீடு சுகாதாரப்பணியாளர்கள் சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கவுள்ளனர். எனவே இந்த வாய்ப்பை தவறாமல்பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+