3 தொகுதிகளைக் கேட்கும் புதிய நீதிக் கட்சி!
சென்னை:
எந்தக் கூட்டணியில் எங்களுக்கு இடம் கிடைத்தாலும் 3 எம்.பி. தொகுதிகளை கேட்போம், கிடைக்காவிட்டால்தனித்துப் போட்டியிடுவோம் என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு சற்று முன்பாக உதித்த புதிய நீதிக் கட்சி, தேர்தலில் சந்தித்த படுதோல்விக்குப் பிறகுஅமைதி காத்து வந்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி மீண்டும் புத்துயிர்பெற்றுள்ளது.
இக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகுசெய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடன்கூட்டணி வைப்பது தொடர்பாக இதுவரை எந்த அரசியல் கட்சியும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இருப்பினும், எந்தக் கூட்டணியில் நாங்கள் இடம் பெற்றாலும் 3 தொகுதிகளைக் கேட்போம். கிடைக்காவிட்டால்15 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு எங்களது பலத்தை நிரூபிப்போம். எந்ததெந்த தொகுதிகளில்போட்டியிடுவது என்பது குறித்து பிப்ரவரி 3ம் தேதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்என்றார்.
கூட்டத்தில், வ.உ.சிதம்பரனாருக்கு மணி மண்டபம் கட்டுவது, முதலியார்கள், பிள்ளைமார்கள், சேனைத் தலைவர்ஆகிய பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள்விடுத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.