தேர்தலில் தனித்து போட்டியிட தயார்: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தனித்துப் போட்டியிடவும் தயாராக இருப்பதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். கூட்டணி அமைத்தோ, தனித்தோ தேர்தலைச் சந்திப்பார்கள். எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவு வெளியிடப்படும்.
காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்குக் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதற்காக மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியாகத் திரண்டு மத்திய அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications