சரக்கு ரயிலில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு!
சேலம்:
சேலம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலின் ஒரு என்ஜினில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. டிரைவரின்சமயோஜிதத்தால் ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு 40 வேகன்கள், 2 என்ஜின்களுடன் ஒருசரக்கு ரயில், கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சேலம் அருகே வேம்பாடித்தளம் என்ற இடத்தில் ரயில் வந்தபோது ஒரு என்ஜினிலிருந்து புகையும், வெடிக்கும்சப்தம் கிளம்பியது. இதையடுத்து சரக்கு ரயிலின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இறங்கிப் பார்த்தபோதுஎன்ஜினுக்குள் இருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடிதீயை அணைத்தனர். டிரைவரின் சமயோஜிதத்தால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications