ஷேர் ஆட்டோவை நசுக்கிய லாரி: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஷேர் ஆட்டோ மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்திற்கு 6 பேருடன் ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. அப்போதுசென்னையிலிருது பவானிக்கு நிலக்கரி பாளங்களை ஏற்றிச் சென்ற லாரி, முந்தியம்பாக்கம் என்ற இடத்தில்பயங்கரமாக மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள்.












Click it and Unblock the Notifications