For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.பி. தேர்தல்: மதுரையில் ஜெயலலிதா போட்டி?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா போட்டியிடக் கூடும் என்றுதெரிகிறது.

முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் சசிகலா நிறுத்தப்படலாம் என்று அந்தக்கட்சியினர் இடையே பேச்சு இருந்து வருகிறது.

இந் நிலையில் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற மதுரை அதிமுக பிரமுகர்கள் கூட்டத்தில்,மதுரை தொகுதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் தேர்தலுக்கு முதல்வர் ஜெயலலிதாவை முன்னிறுத்துவது என்றும், அதற்காகமதுரை மக்களவைத் தொகுதியில் அவரைப் போட்டியிடச் செய்வது என்றும் அக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவதுஅணி அமைத்து பிரதமர் பதவியைப் பிடிப்போம் என ஜெயலலிதா பேசி வந்தார். இப்போது அப்படிப்பட்ட அணிஅமைவது சாத்தியமா என்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அதிமுகவின் மதுரைப் பிரிவின் சார்பில்நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தீர்மானத்தில் 2020ம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்கும் முழுத் தகுதி ஜெயலலிதா ஒருவருக்கேஉள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும். அதற்குதொண்டர்கள் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் விரலசைவு இல்லாமல் அமைச்சர் தலைமையில் இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கவாட்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

அதே நேரத்தில் திண்டுக்கல் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.முக்குலத்தோரின் அமோக ஆதரவுடன் இந்தத் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் பலமுறை வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தொகுதியின் மீது சசிகலா தரப்புக்கு ஒரு கண் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X