கொலை மிரட்டல்: அதிமுக எம்.எல்.ஏ.வின் கணவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், புதுக்கோட்டைமாவட்டம் கொளத்தூர் சட்டசபைஉறுப்பினர் கருப்பாயியின் கணவர் கருப்பையாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொளத்தூர் எம்.எல்.ஏ. கருப்பாயி, சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது கணவர் கருப்பையா தன்னை அடித்து உதைப்பதாக கூறியிருந்தார்.இதையடுத்து கருப்பையா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந் நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குச் சென்ற கருப்பாயி, தனது கணவர் தன்னைக் கொன்றுவிடுவதாக கூறி மிரட்டுவதாக புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரையடுத்து கருப்பையாவை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications