For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 மதிமுக நிர்வாகிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா? மாலை தெரியும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா வழக்கில் கைதாகி சிறை வாசம் அனுபவித்து வரும் 8 மதிமுக பிரமுகர்களின் ஜாமீன் மனுக்கள் மீதானவிசாரணை இன்று பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது. மாலையில் தீர்ப்பு வெளியாகும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோமற்றும் 8 மதிமுக பிரமுகர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வைகோ தவிர மற்ற 8 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர். ஒரு ஆண்டுக்கு மேல் சிறையில் கழித்தவர்களுக்கு சாதாரண ஜாமீன் விதிமுறைகளே பொருந்தும்என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து செவந்தியப்பன், மதுரை இளவரசன், கணேசன், கணேசமூர்த்தி உள்ளிட்ட 8 மதிமுகவினரின்ஜாமீன் மனுக்கள் மீது சிறப்பு பெஞ்ச் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக வழக்கறிஞர்கள்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற உயர் நீதிமன்றம்இன்று விசாரணை நடக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நீதிபதி பி.டி.தினகரன்,நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று காலை மதிமுகவினரின் ஜாமீன் மனுக்கள்விசாரணைக்கு வந்தன.

மனுக்களைப் பரிசீலித்த நீதிபதிகள் பிற்பகலில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். இதனால் இன்றுமாலைக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைகோ காவல் 12ம் தேதி வரை நீட்டிப்பு

இந் நிலையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக்காவல் வருகிற 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வைகோ உள்ளிட்ட 8 மதிமுகவினரும் (உடல் நலம் சரியில்லாத மணியம் தவிர) பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மதுரையைச் சேர்ந்த முத்துசாமி என்ற சாட்சியிடம், வைகோ தரப்புவழக்கறிஞர்களான தினகரன் மற்றும் பிரியகுமார் இருவரும் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தனர்.

அதன் பின்னர் தனது குறுக்கு விசாரணையை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்குமாறும், புதன்கிழமைக்குகுறுக்கு விசாரணையை நீட்டிக்குமாறும் தினகரன் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் புதன்கிழமை தான்நீதிமன்றத்திற்கு வர இயலாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து வருகிற 12ம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிராஜேந்திரன் வழக்கை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X