19 ம் தேதி கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் வரும் 19ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலத் தலைமைச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். மத்திய நீர்வளத்துறையின் செயலாளர் கோஸ்வாமி இதற்குத் தலைமை வகிப்பார்.
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இக் கூட்டம் நடந்தது. அதில் வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக மத்திய அரசு வழங்கிய யோசனைகளை கர்நாடகம் நிராகரித்தது. ஆனால், தமிழகம்,கேரளம், பாண்டிச்சேரி மாநிலங்கள் ஏற்றன.
வரும் 19ம் தேதி நடக்கும் கூட்டத்திலும் தமிழகத்தின் சார்பில் வறட்சி கால நீர் பகிர்வு குறித்த திட்டத்தைஉடனடியாக அமலாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படும். இந்த முறையும் மத்திய அரசின்யோசனையை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்த யோசனைகள் திட்டமாக்கப்பட்டு அதை அமலாக்கும் வகையில்உத்தரவுகளை கண்காணிப்பு ஆணையம் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் காவிரி டெல்டாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. மேட்டூரில் நீர் இருப்பு மிகவும் குறைந்துஅபாயகரமான அளவுக்கு வறண்டு போயுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணை நேற்று மூடப்பட்டது. இதனால்தஞ்சை மாவட்டத்தில் நம்பிக்கையுடன் பயிரிடப்பட்ட சம்பா பயிர் கருகும் சூழல் எழுந்துள்ளது.
நதிகள் இணைப்பு:
இந் நிலையில், நதிகள் இணைப்பு குறித்து ஆராய்வது தொடர்பாக மத்திய அரசு நியமித்துள்ள குழுவின்நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை ஏப்ரல் 23ம் தேதிக்குள் சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று மத்தியஅரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.