தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலை: குமரியில் தொடங்கி வைக்கிறார் வாஜ்பாய்
வேலூர்:
நாட்டின் நான்கு முனைகளையும் இணைக்கும் தங்க நாற்கர (Golden Quadrangle NH Scheme) தேசியநெடுஞ்சாலையின் அடுத்த கட்ட பணியை கன்னியாகுமரியில் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைக்கவுள்ளார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நாட்டின் நான்கு பகுதிகளையும் 6 வழிப் பாதைகள் கொண்ட மிகப்பிரம்மாண்டமான நெடுஞ்சாலைகளால் இணைக்கும் பணி தீவிரமாய் நடந்து வருகிறது. வட மாநிலங்களில் இந்தப்பணி நடந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் தென்னகத்திலும் இந்தப் பணியைத் துவக்கி வைக்கவுள்ளார் வாஜ்பாய். இதற்காக அடுத்த மாதம்அவர் கன்னியாகுமரி வருகிறார்.
மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இத் தகவலைத்தெரிவித்தார்.ய
இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் திட்டத்தின்கீழ் அடுத்த மாதம் தூத்துக்குடி-திருநெல்வேலி இடையேயான திட்டப்பணி தொடங்கும். சாலைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசுதமிழகத்திற்கு ரூ.82 கோடி நிதி தந்துள்ளது.
மாநிலச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேஇருக்கும் சாலைகளைப் பராமரிப்பதில் இப்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது குறித்து ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் பா.ஜ.க. தேசிய செயற்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications