வைகோ காவல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காவல் வருகிற12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வைகோ உள்ளிட்ட 8 மதிமுகவினரும் (உடல் நலம் சரியில்லாத மணியம் தவிர) பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மதுரையைச் சேர்ந்த முத்துசாமி என்ற சாட்சியிடம், வைகோ தரப்புவழக்கறிஞர்களான தினகரன் மற்றும் பிரியகுமார் இருவரும் குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தனர்.
அதன் பின்னர் தனது குறுக்கு விசாரணையை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்குமாறும், புதன்கிழமைக்குகுறுக்கு விசாரணையை நீட்டிக்குமாறும் தினகரன் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் புதன்கிழமை தான்நீதிமன்றத்திற்கு வர இயலாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து வருகிற 12ம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிய நீதிபதிராஜேந்திரன் வழக்கை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.