இளங்கோவன் மீதான டெஸ்மா வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் மீதான டெஸ்மா வழக்கு பிப்ரவரி 6ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தூண்டி விட்டதாகக் கூறி திமுக தலைவர் கருணாநிதி, இளங்கோவன்,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் ஆகியோர் மீதுடெஸ்மா சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதில் இளங்கோவன் மீதான வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஇளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர், வழக்கை தள்ளி வைக்குமாறு கோரி மனுசெய்தார்.
அதைப் பரிசீலித்த நீதிபதி வழக்கை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications