For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வருவதால் மீண்டும் இலவச வேட்டி, சேலை: ஜெ.வுக்கு கருணாநிதி சூடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே மீண்டும் இலவச வேட்டி, சேலைத் திட்டத்தை தமிழக அரசுகொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ளதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. மேலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தது ஆகிய இரு காரணங்களினால், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தஇலவச வேட்டி, சேலைத் திட்டத்தை ஜெயலலிதா அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவு நெசவாளர்களிடமிருந்து இலவச வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல்செய்தது. ஆனால் தற்போது அவ்வாறு செய்யவில்லை என்று தெரிகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்து வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளைஇடித்து விட்டு அங்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த திமுக ஆட்சியின்போது, பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை, அரசு ஊழியர்களிடமேவழங்கி அவர்களே வீடு கட்டிக் கொள்ளும் வகையிலான திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் அதற்குள் ஆட்சி மாறி விட்டதால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட முடியாமல் போய் விட்டது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X