மதிமுகவினரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: நெடுமாறன் நாளை விடுதலை
சென்னை:
பொடா சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர்கள் 8 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னைஉயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, செவந்தியப்பன், இளவரசன், பூமிநாதன்,பொறுப்பாளர்கள் அழகுசுந்தரம், மணியன், கணேசன், நாகராசன் ஆகியோரை பொடா சட்டத்தின் கீழ் தமிழகஅரசு கைது செய்தது.
இவர்களில் வைகோ தவர்த்து ஏனைய 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு பெஞ்ச் அமைத்து ஜனவரி முதல் வாரத்தில்விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும் என்று மதிமுக வழக்கறிஞர்கள் தேவதாஸ், நன்மாறன் ஆகியோர்உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து மதிமுகவினர் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தினகரன், நீதிபதி நாகப்பன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தேதி குறிப்பிடாமல்தீர்ப்பைத் தள்ளிவைத்தனர்.
நெடுமாறன் நாளை விடுதலை:
இதற்கிடையே அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுவிட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்நாளை கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
வைகோவுடன் சந்திப்பு:
மதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில்உள்ள வைகோவை நேற்று மாலை சந்தித்துப் பேசினர். ஒரு மணிநேரம் நீடித்த இச் சந்திப்பிற்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய கண்ணப்பன்,
திமுக தலைவர் கருணாநிதியுடன் மதிமுக தலைமை நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து வைகோவிடம்தெரிவித்தோம். கடந்த 2ம் தேதி நடைபெறுவதாக இருந்த மதிமுக பொதுக்குழுக் கூட்டம்ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, எப்போது பொதுக்குழு கூட்டலாம் என்பது ஆலோசிக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications