மேட்டூர் அணை காலி: குடிநீருக்கு ஏங்கும் சேலம்!
சேலம்:
மேட்டூர் அணை காலியாகி வருவதால் காவிரி டெல்டா பகுதி மக்கள் மட்டுமல்லாது, சேலம் மாநகர மக்களும்பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக இருப்பது மேட்டூர் அணைதான். இங்கிருந்து வரும்தண்ணீர்தான் அவர்களது விவசாயத்திற்கு பேருதவியாக உள்ளது. தற்போது சம்பாப் பயிர்கள் அனைத்தும் கருகும்நிலையில் உள்ளன. சில வாரமாக திறந்து விடப்பட்ட மேட்டூர் அணை தற்போது மூடப்பட்டுவிட்டதால் விவசாயிகள் என்ன செய்வதுஎன்று தெரியாமல் அதிர்ந்து போய் உள்ளனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இணையான துயரத்தில்சேலம் மாநகர மக்களும் உள்ளனர்.
மேட்டூர் அணைதான் சேலம் மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையில்நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால் வரும் கோடை காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றுஅதிகாரிகளும் மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பகுதிக்கு தினசரி விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுவந்ததால், தற்போது அணையில் வெறும் 7.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
தண்ணீர் அளவு குறைவாக இருந்தாலும் கூட இதை வைத்து இன்னும் 3 மாதங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யமுடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
காவிரி வறண்டதால், டெல்டா மட்டுமல்லாது சேலம் மாநகரும் துவண்டு போயுள்ளது.












Click it and Unblock the Notifications