For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியாவுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: மீண்டும் காங்கிரசில் இணைகிறார்?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, காங்கிரஸ் ஜனநாயக பேரவை தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துப்பேசினார். இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடத்தும் நிலையில் இச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதுமுக்கியவத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மறைந்த மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்துபோது, அதைஎதிர்த்து தனிக் கட்சி தொடங்கினார் ப.சிதம்பரம். பின்னாளில் தா.மா.க. காங்கிரஸ் கட்சி இணைந்துபோதும்,ப.சிதம்பரம் தொடர்ந்து தனித்து இயங்கி வருகிறார்.

சிதம்பரம் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.இதுவரை அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந் நிலையில் திமுகவுடன் சேர்ந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில்,கருணாநிதிக்கு நெருக்கமான சிதம்பரம், சோனியாவை சந்தித்துளார். நேற்று இரவு இச் சந்திப்பு நடந்தது.

சிதம்பரத்தை மீண்டும் காங்கிரசில் இணையுமாறு சோனியா வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு சிதம்பரத்திடம்இருந்து சாதகமான பதிலே வந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக- காங்கிரஸ்கூட்டணி அமையும் நிலையில் சிதம்பரம் தங்களுடன் இருப்பது மிக அவசியம் என சோனியா கூறியுள்ளார்.

தொடங்கியது காரிய கமிட்டி கூட்டம்:

இந் நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று காலை சோனியா காந்திதலைமையில் தொடங்கியது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் முதல்வர்கள் கலந்து கொண்டுள்ள இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல், கூட்டணிகள் குறித்து விவாதித்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X