டி.வி. பார்த்ததால் தாய் திட்டினார்: மகள் தூக்கில் தொங்கினார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டு வேலை பார்க்காமல் எப்போது பார்த்தாலும் டிவி பார்த்துக் கொண்டுள்ளாயே என்று தாயார் திட்டியதால்மனம் உடைந்த மகள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் சத்யா. சென்னை எத்திராஜ் கல்லூரியில் 2வதுஆண்டு பி.காம் படித்து வந்தார். சத்யா, வீட்டு வேலை எதையும் செய்யாமல் எப்போதும் டிவி பார்ப்பது வழக்கம்என்று கூறப்படுகிறது.
அடிக்கடி, டிவி பார்க்காதே என்று சத்யாவின் தாயார் சந்தோசம் திட்டிக் கொண்டே இருப்பாராம். திங்கள்கிழமைகாலையும் இதேபோல சத்யாவைத் திட்டியுள்ளார் சந்தோசம். இதனால் மன வருத்தம் அடைந்த சத்யா, பெற்றோர்வேலைக்குச் சென்றதும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சத்யாவின் தந்தை பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார், தாயார் சென்னை துறைமுக கழகத்தில் வேலை பார்த்துவருகிறார்.












Click it and Unblock the Notifications