பரிதாப மரணத்தில் முடிந்த தற்கொலை டிராமா!
சென்னை:
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவி மாடியிலிருந்து கீழேவிழுந்து பரிதாபமாக இறந்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருபவர் மகேஷ் குமார். இவரது மனைவி பூர்ணிமா. இருவரும்தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
திங்கள்கிழமை இருவரும் தங்களது வீட்டின் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உன்னுடன் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று கூறியமகேஷ் குமார் பால்கனியிலிருந்து கீழே குதித்து விடுவது போல செய்துள்ளார்.
பதறிப் போன பூர்ணிமா கணவரை காப்பாற்ற முயன்றபோது கால் தடுமாறி மேலேயிருந்து கீழே விழுந்தார். இதில்தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். பூர்ணிமாவைக் காப்பாற்ற மகேஷ்குமார் முயன்றபோது அவரும் கீழேவிழுந்தார். அவரது கால் முறிந்தது.












Click it and Unblock the Notifications