தமிழை செம்மொழியாக்க கோரி மதுரையில் மாணவர்கள் பேரணி
மதுரை:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரைசெந்தமிழ்க் கல்லூரி மாணவ, மாணவியர் பேரணி நடத்தினர்.
மதுரையில் உள்ள செந்தமிழ்க் கல்லூரி மாணவ, மாணவியர் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து பேரணிநடத்தினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைஅடைந்தது. அங்கு கோரிக்கை மனுவை மாணவர்கள் கொடுத்தனர்.
தமிழ் மொழியை இன்னும் ஒரு மாதத்திற்குள் செம்மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆரம்பக் கல்வியை தமிழ் மொழியில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.
இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படா விட்டால் அனைத்துக் கல்லூரி மாணவர்களும்போராட்டத்தில் குதிப்பர் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.