திருவாவடுதுறை இளைய மடாதிபதியின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
திருவாவடுதுறை மூத்த ஆதினத்தைக் கொல்ல முயன்ற இளைய மடாதிபதிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு கடுங்காவல்தண்டனையை நிறுத்தி வைத்து நாகப்பட்டனம் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதின மூத்த மடாதிபதி சிவப்பிரகாச பரமாச்சார்யா சுவாமிகளை கொலை செய்ய முயன்றஇளைய மடாதிபதி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்குநடந்தது.
இந்த வழக்கில் இளைய மடாதிபதி காசிவிஸ்வநாத பண்டார சன்னதிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாகப்பட்டனம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இளைய மடாதிபதி சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இஷத் அலி, இளைய மடாதிபதிக்கு விதிக்கப்பட்டதண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications