இறங்கி வந்தார் ராமதாஸ்: திமுக அணியில் சேருகிறது பா.ம.க
சென்னை:
அதிமுக கண்டு கொள்ளாமல் விட்டதால், வேறு வழியின்றி தனது நிலையிலிருந்து இறங்கி வந்து திமுக அணியில்சேர முன் வந்துள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
வரும் 12ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாத வாக்கில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலை ஒன்றாகசந்தித்த திமுகவும், பா.ஜகவும் இம் முறை எதிரெதிராக நிற்கின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் இடம் பெறுகின்றன. இந்தக் கூட்டணியில் சேருவது குறித்துமுடிவை அறிவிக்காமல் இருந்தது பாட்டாளி மக்கள் கட்சி.
எங்களுக்கு 10 சீட்கள் தரும் கூட்டணியில்தான் இடம் பெறுவோம் என்று ராமதாஸ் கூறினார். இதை அதிமுகமற்றும் திமுக ஆகியவை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்தச் செய்தியை மறுத்துப் பார்த்தார்.
இருந்தாலும் கூட்டணி தொடர்பாக அதிமுக தரப்பில் இருந்து ராமதாஸை யாரும் அணுகவில்லை.
தனது கணக்கு தப்புக்கணக்கானதை உணர்ந்து கொண்டார் ராமதாஸ், அவர் அதிகம் எதிர்பார்த்தது,அதிமுகவிலிருந்து அழைப்பு வரும் என்றுதான். ஆனால் முதல்வர் ஜெயலலிதா அவரைக் கண்டு கொள்ளவேஇல்லை.
அவரை மட்டுமின்றி அதிமுகவுடன் கூட்டணிக்கு அலையும் பா.ஜ.கவையும் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பாமக, இன்னும் பா.ஜ.கவுடன் இருந்தால் நிலைமை படு மோசமாக விடும் என்றுஉணர்ந்து கொண்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பான திமுக அணியில் இணைந்து விடுவதே நல்லது என்றுராமதாஸ் முடிவெடுத்துவிட்டார் என அக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கூட்டணி, தேர்தல் முடிந்தவுடன் இன்னொரு கூட்டணி என்று கூடு விட்டு கூடுபாய்ந்து வித்தை காட்டிக் கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அவப் பெயர் ஏற்படும், நமதுஜாதியினடையே கூட அதிருப்தி ஏற்பட்டு விடும் என்று தர்மபுரி எம்.பியும் கட்சியின் முன்னணி நிர்வாகியுமானபு.த.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பகிரங்கமாகவே ராமதாசிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதையடுத்து திமுகவுடன் இணைந்து விடுவது என்ற முடிவை ராமதாஸ் எடுத்துவிட்டார் என்கின்றனர்.
வரும் 12ம் தேதி சென்னையில் பாமகவின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அக் கூட்டத்தில்இதற்கான அறிவிப்பை ராமதாஸ் அறிவிக்கக் கூடும்.
திமுக அணியில் இணைவது குறித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்தும் அன்றுஅதிகாரப்பூர்வமாக பா.ம.க. அறிவிக்கும்.
இந்தத் தகவல்களை அறிந்து அறிவாலய வட்டாரம் மகிழ்ச்சியில் இருந்தாலும், 12ம் தேதிக்குள் அதிமுக இடையில்புகுந்து ஏதாவது குளறுபடி செய்துவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications