காவிரி விஷயத்தில் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது: பா.ஜ.க
மயிலாடுதுறை:
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு மீது குற்றம் சாட்டக் கூாது என்று தமிழக பா.ஜ.க தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாய் தன்னால் முடிந்த அனைத்தையும்செய்து கொண்டுள்ளார். காவியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததற்காக பிரதமர் வாஜ்பாயை தமிழகஅரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுவது நியாயமானதல்ல.
காவிரிப் பிரச்சினையில் மக்களை திசை திருப்பும் வேலையைத்தான் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்செய்து வருகின்றன. இந்தக் கட்சிகள் ஒரு போதும் கர்நாடக அரசை விமர்சனம் செய்ததில்லை.
கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் காவிரி விஷயத்தில் மிகுந்த ஒற்றுமையுடன் நடந்து கொள்கின்றன. ஆனால்தமிழக அரசியல் கட்சிகள் முரண்பாடான நிலையை மேற்கொண்டுள்ளன. நம்மிடம் ஒற்றுமை இல்லை.
காவிரிக் கண்காணிப்பு குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழக பா.ஜ.க., பிரதமர் வாஜ்பாயைக் கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications