மின் தடை 3 மணி நேரத்தில் சரியாகாவிட்டால் நஷ்ட ஈடு !!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீடுகள், நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ள மின் இணைப்பில் பழுது ஏற்பட்டு, அதை 3 மணி நேரத்தில்மின்வாரியம் சரி செய்யாவிட்டால், நுகர்வோருக்கு ரூ.50 முதல் ரூ.2,000 வரை நஷ்ட ஈடு கொடுக்க வகைசெய்யும் விதத்தில் விதிமுறை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய வரைவு விதிமுறைகளில் இந்த பரிந்துரைகூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மின்துறையை சீராக்க தேசிய மின்சார ஆணையம் அமைக்கப்பட்டது. அதே போல ஒவ்வொருமாநிலமும் இதே போன்ற ஆணையத்தை அமைத்துள்ளன. இந்த ஆணையங்கள் தான் இப்போது மின்கட்டணத்தை நிர்ணயித்து வருகின்றன.

வாக்குகளுக்காக மின் கட்டணத்தை அரசுகள் உயர்த்தாமல் இருந்து மின் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தநிலையில் இந்த ஆணையங்கள் அதிரடியாய் செயல்பட ஆரம்பித்துளளன. விவசாயிகளுக்கு இலவசமின்சாரத்தையும் இந்த ஆணையங்கள் ரத்து செய்துவிட்டன.

விவசாயிகளுக்கு அரசு இலவச மின்சாரம் தர விரும்பினால் அதற்கான கட்டணத்தை மின் வாரியத்துக்கு அரசுசெலுத்திவிட வேண்டும் என்ற வரைமுறை அமலுக்கு வந்துவிட்டது.

இதனால் பல மாநிலங்களிலும் மின் வாரியங்கள் நஷ்டத்தில் இருந்து மீள ஆரம்பித்துள்ளதோடு, புதிய மின்உற்பத்தித் திட்டங்களிலும் முதலீடு செய்யும் அளவுக்கு பலம் பெற ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில் பணம் செலுத்தி மின்சாரத்தைப் பெறும் நுகர்வோரின் குறைகளைப் போக்கி, பொறுப்புணர்வுடன்மின் வாரியத்தை நடந்து கொள்ளச் செய்ய தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில பரிந்துரைகளைஅரசிடம் தந்துள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* கட்டண கணக்கிட்டதில் தவறு இருப்பதாக வாடிக்கையாளர் புகார் செய்தால், கட்டணம் செலுத்தியாக வேண்டியஇறுதித் தேதிக்குள் அதை சரி செய்ய வேண்டும். இதை ஒரு காரணம் கூறி வாடிக்கையாளர் கட்டணம்செலுத்துவதை நிறுத்தி வைக்கக் கூடாது. பில் குறித்த புகாரை உரிய தேதியில் சரி செய்ய மின்வாரியம் தவறினால்வாடிக்கையாளருக்கு ரூ.150 நஷ்டஈடு தர வேண்டும்.

* மீட்டரில் பழுது இருப்பதாகத் தெரிய வந்தால், அதை சரிசெய்வதற்கான கட்டணத்தை வாங்கிக் கொண்டு 30நாள்களுக்குள் சரிசெய்து தர வேண்டும்.

* வாடிக்கையாளரின் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால், அதற்கான காரணத்தைப் பொறுத்து, நகரஙகளில் 3மணி நேரத்திற்குள்ளும், கிராமங்களில் 6 மணி நேரத்திற்குள்ளும் சரிசெய்ய வேண்டும். இதை செய்யத் தவறினால்ரூ.50 முதல் ரூ.2,000 வரை நஷ்டஈடு அளிக்க வேண்டும்.

* புதிய இணைப்பு, கூடுதல் திறன் கொண்ட இணைப்பு, தாற்காலிக இணைப்பு, மீட்டர் மாற்றுதல் உள்ளிட்டகோரிக்கைகளை உரிய தேதியில் நிறைவேற்றாவிட்டால் தினமும் ரூ.100 என்ற அடிப்படையில், ரூ.1,000க்குஅதிகமாகமல் நஷ்டஈடு தர வேண்டும்.

இவ்வாறு மக்களுக்கு சாதகமான பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இதை அரசு அமலாக்கினால், சாதாரண பியூஸ் பிரச்சனைக்குக் கூட மின் வாரிய அலுவலகத்துக்கு காவடி எடுத்து,லைன் மேன்களில் கை, காலில் விழுந்து, லஞ்சம் கொடுத்து அழுது வரும் மக்களுக்கு பெரும் விடியலாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+