மலேசியா: 8 தமிழர்களும் தூக்கு தண்டனையிலிருந்து தப்பினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலேசியாவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட 8 தமிழர்களும் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்வேலைக்காக சென்றிருந்தனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த இடத்தில் போதைப் பொருட்கள் இருந்ததாக கூறி 8பேரையும் மலேசியப் போலீஸார் கைது செய்தனர்.

மலேசிய நாட்டுச் சட்டப்படி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின.ஆனால் இத்தகவலை மலேசிய அமைச்சர்கள் மறுத்தனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குதான் போடப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் முடியவில்லை, மரணதண்டனையும் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் விளக்கினர்.

இந் நிலையில் 8 பேரையும் காப்பாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இதையடுத்து அந்த தமிழ் இளைஞர்களை மீட்கும் முயற்சிகளில் வெளியுறவுத்துறை இறங்கியது. மலேசியாவில்உள்ள இந்தியத் தூதரகம் அந்த இளைஞர்களுக்கு உதவியது. இந்த இளைஞர்களை கேட்பார் இல்லை என்றுகேவலமாக நடத்திய மலேசிய போலீசாரும் நீதிமன்றமும், இந்திய அரசின் தலையீட்டின்பேரில் தங்களதுநிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த்த தவறும் இல்லைஎன்று தெரிய வந்துள்ளதாக கோலாம்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் இவர்களுக்கு விடுதலை கிடைத்தது. விரைவில் இவர்கள் தமிழகம் திரும்புகின்றனர்.

இவர்களை மீட்க உதவிய முதல்வர் ஜெயலலிதா, வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர்நிச்சயம் பெரும் பாராட்டுக்குரியவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+