கூட்டணியில் அதிமுகவை இழுக்க பா.ஜ.க. தீவிரம்
டெல்லி:
மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சேர வாய்ப்புள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆரம்ப கட்ட பேச்சு நடத்த பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுசென்னை வருவார் என்றும் தெரிகிறது.
நேற்று பிரதமர் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் அதிமுகவுடனானஉறவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது அதிமுகவுடன் பேச்சு நடத்தலாம் என அத்வானி தரப்பினர்சொன்னதை வாஜ்பாய் ஏற்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து நாயுடுவை ஜெயலலிதாவிடம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 11, 12ம் தேதிகளில்ஹைதராபாத்தில் நடக்கும் பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவை கூட்டணிக்கு வரச் சொல்லி கோரிக்கைவைக்கப்படும். இதன் பின்னர் ஜெயலலிதாவை நாயுடு சந்திப்பார்
இந் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெர்னாண்டஸ்,
அதிமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க இதுவரை எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுக்கவில்லை.ஆனால், வருங்காலத்தில் அதுபோன்ற கூட்டணி ஏற்படாது என்று கூறுவதிற்கில்லை என்றார்.
இப்போது பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் 4 எம்.பிக்கள் உள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 7 இடங்கள் வரைகேட்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications