தமிழக-கேரள நீர் பங்கீடு ஒப்பந்தம்: விளக்கம் கேட்கிறது திமுக
சென்னை:
பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழக, கேரள மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்துதமிழக அரசு விளக்க வேண்டும் என முன்னாள் திமுக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப் பங்கீடு தொடர்பறீணீ இரு மாநிலஅரசுகளுக்கும் இடையே சமீபத்தில் திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடந்தது. இதைத் தொடர்ந்து உடன்பாடுஎட்டப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முழு விவரத்தையும் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஜெயலலிதா அரசின் கடமையாகும்.இரு தரப்பு பேச்சுவார்த்தையின் முழு விவரங்களையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.
பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப்பாசன விவசாயிகள் இந்த பேச்சுவார்த்தை குறித்தும், உடன்பாடு குறித்தும் அறிந்து கொள்ளும் முழுஉரிமை படைத்தவர்கள் ஆவர் என்று கூறியுள்ளார் அவர்.
திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.